
சந்தைக்கு 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க நடவடிக்கை
சந்தைக்கு 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல பகுதிகளில் தொடர்ந்து எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எரிவாயு பற்றாக்குறை காரணமாக, 3,900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவை ஏற்றிச் சென்ற கப்பல்
நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.
மேலும், நாளை மற்றும் 28 ஆம் திகதிகளில் 7,600 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளன.
CATEGORIES இலங்கை
