தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோர்கள் , மே மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் , தன்சல் காலப்பகுதியில் தன்சல் உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

குறித்த நடவடிக்கைக்கா, சுமார் மூவாயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

Share This