வெலிகம பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது பொலிஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.