பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், அந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.