மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவங்கொட பகுதியில் ‘பஸ் திலீப’ என்ற நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, மீகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் மீண்டுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.