ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல  பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், குறித்த வீட்டின் கதவு மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை  பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )