அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல்

அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இன்று (24) சந்தேகநபரை அடையாளம் காண முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் , குறித்த பெண் வைத்தியர் சமூகமளிக்காத காரணத்தினால் இன்றைய தினம் அது முன்னெடுக்கப்படவில்லை.

அதன்படி, சந்தேகநபர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானம் நாலக ஜயசூரிய உத்தரவிட்டார்.

Share This