நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து  உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது

பொருளாதார பிரச்சினைகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொடுப்பனவு பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This