அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஜதரபாத் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியையே சந்தித்திருந்தது. என்றாலும், இந்தப் போட்டியை பார்வையிட நடிகர்களான அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயனின் குடும்பங்கள் வந்திருந்தன.
இதன்போது இரண்டு குடும்பத்தினரும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
அஜித், ஷாலினி ஆகியோர் உடன் எடுத்த போட்டோக்களை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.