பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், அரசியல் தேவை காரணமாகவே தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்கு தகுதியான அதிகாரியை நியமிப்பதில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This