சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (09) அதிகாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This