பொத்துவில் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி – மேலும் 57 பேர் காயம்

பொத்துவில் பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலா சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.