டி20 தொடரில் இருந்து மதீஷ பத்திரண விலகினார்!

டி20 தொடரில் இருந்து மதீஷ பத்திரண விலகினார்!

நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண விலகியுள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக கண்டியில் இடம்பெற்ற போட்டியின் போது அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக நான்கு பந்துகள் மாத்திரம் வீசிய நிலையில் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தில் இருந்து மீள்வதற்கு அவருக்கு சிறிது காலம் தேவை என்பதால், இந்த தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அல்லது நுவன் துஷார ஆகியோரில் ஒருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )