அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்ததைத் தொடர்ந்து கலிபோர்னியா போராட்டம் தீவிரமடைந்தது.

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2000 பேர் அனுப்பட்டுள்ள நிலையில் மேலும் 2000 படை வீரர்களை அனுப்புவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார்.

இதனிடையே பாதுகாப்பு படையினருக்கு உதவுவதற்காக சுமார் 700 கடற்படை வீரர்கள் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

டெக்சாஸில், திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு முன்னதாக ஆளுநர் தேசிய காவற்படையை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமெரிக்காவின் பிற நகரங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நியூயோர்க்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This