மே 06 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று (20) நண்பகலுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
336 உள்ளாட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் 17 ஆம் திகதி தொடங்கி இன்று 20ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.