“LGBTQ மதிப்புகளை ஊக்குவிக்கும் ஜூலி சுங்” – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம்

இலங்கை குழந்தைகள் மத்தியில் LGBTQ மதிப்புகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. “இலங்கைப் பிரிவினைக்கு எதிரான கூட்டணி” இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தற்போதைய அமெரிக்க தூதர் ஜூலி சுங் உள்ளூர் இளைஞர்கள் மத்தியில் LGBTQ சித்தாந்தங்களால் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், 2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த வெகுஜன போராட்டங்களை ஆதரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்குமாறும் போராட்டக்காரர்கள் ட்ரம்பிடம் வலியுறுத்தினர்.