காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்
43 பலஸ்தீனியர்கள் உயிரிழந்த ஒரு நாளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் காசாவில் தனது முக்கிய நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து காசா நகரத்தின் மக்கள்தொகையில்
சுமார் 450,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

காசா மிக மோசமான மரணம் மற்றும் அழிவை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
தெரிவித்துள்ளார்.

Share This