இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபரிடம் இருந்த அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் வெளியாகியுள்ளன.”

Share This