இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இப்தார் – சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராப்போசன விருந்துபசாரம் நேற்று முன்தினம் (04) கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.