நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மீனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 04 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Share This