அமெரிக்காவில் பெண் ஊடவியலாளரை நோக்கி ரப்பர் குண்டு தாக்குதல் – லாஸ் ஏஞ்சலஸில் பெரும் பதற்றம்

அமெரிக்காவில் பெண் ஊடவியலாளரை நோக்கி ரப்பர் குண்டு தாக்குதல் – லாஸ் ஏஞ்சலஸில் பெரும் பதற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட ரப்பர் குண்டு தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.

லாஸ் ஏஞ்சலஸில் நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் வரும் நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து தகவல் வழங்கிய பெண் ஊடவியலாளரை நோக்கி பொலிஸ் அதிகாரியொருவர் ரப்பர் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும்  இந்த செயற்பாடுகளை கொடூரமானது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சித்தரித்துள்ளார்.

ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியமைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, லாஸ் ஏஞ்சல்சில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2000 பேர் அனுப்பட்டுள்ள நிலையில் மேலும் 2000 படை வீரர்களை அனுப்புவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார்.

இந்த வீரர்கள் இரண்டு நாட்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே பாதுகாப்பு படையினருக்கு உதவுவதற்கா சுமார் 700 கடற்படை வீரர்கம் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

http://<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>This is beyond outrageous. An Australian reporter, without any provocation, microphone in hand is shot by a rubber bullet while simply doing her job.<br><br>🎥 – <a href=”https://t.co/9FYCfEHFnM”>https://t.co/9FYCfEHFnM</a> <a href=”https://t.co/RsgVIffwYo”>pic.twitter.com/RsgVIffwYo</a></p>&mdash; 𝔗𝔯𝔲𝔱𝔥 𝔐𝔞𝔱𝔱𝔢𝔯𝔰 (@politicsusa46) <a href=”https://twitter.com/politicsusa46/status/1931946783657037918?ref_src=twsrc%5Etfw”>June 9, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

 

 

Share This