செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டது
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மனித புதைகுழியை பார்வையிட்டிருந்தனர்.