மட்டக்களப்பில் பாடசாலை காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பில் பாடசாலை காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில், ஆயுதங்கள் இருப்பதாக, பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏறாவூர் நீதிமன்ற உத்தரவை பெற்று, பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று(09) செவ்வாய்க்கிழமை காலை சோதனை செய்தனர்.

இதன்போது புதைக்கபட்டிருந்த நிலையில் அடைக்கப்பட்ட வாளியொன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share This