தெஹிவளையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு – கொழும்பில் மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக நடக்கும் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை – நெதிமல பகுதியில் உள்ள ஒரு கடை ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 ப்ளுமென்டல் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நேற்று முன்தினம் இரவு நாராஹென்பிட்ட கிங்ஸ் தனியார் வைத்திசாலைக்கு அருகில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.