முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சதீஷ் கமகேவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை
உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் .