
ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் கலந்துரையாடல் வெற்றி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் அதன்படி இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இரு கட்சிகளையும் இணைப்பது மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இந்த வாரத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, ருவன் விஜேவர்தன ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கபீர் ஹஷீம் உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
