தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்த ஆண்டு இதுவரை 2,927 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இவர்களில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும், 680 பேர் மீன்வளத் துறையிலும், 23 பேர் கட்டுமானத் துறையிலும், இரண்டு பேர் விவசாயத் துறையிலும் வேலைகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், தென் கொரியாவில் ஏற்கனவே வேலை வாய்ப்பு பெற்றுள்ள சுமார் 200 இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.

இந்தப் பணியமர்த்தலுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தென் கொரியாவில் வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ஒக்டோபர் 23ஆம் திகதி தொடங்கவுள்ள 2025 கொரிய மொழித் திறன் பரீட்சைக்கு 36,475 பேர் பதிவு செய்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

Share This