முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது.
புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாகவும் அமைதியான முறையிலும் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வக்களிக்க தகுதிபெற்ற 87800 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.
அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக தேர்தலில் 1291அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றதுடன் நடமாடும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.