அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை

அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை

உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டிற்கு உரம், எண்ணெய், மருந்துகள் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதை தீர்மானிக்கும் ஊழல் வலையமைப்பினால் நாடு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சரத் பொன்சேகா கூறுகிறார்.

இந்த ஊழல் வலையமைப்பின் நிறுவனர்கள் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களின் பணக்கார நண்பர்களும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

எனவே, இந்த நேரத்தில் சில விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கவே கூடாது என்றும், அதன் பலன்கள் பழைய ஊழல் வலையமைப்பிற்கு மட்டுமே செல்லும் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டுகிறார்.

மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் பழைய ஊழல் நிறைந்த அரசியல் குழுக்களை முதலில் துடைத்தெறிவதும், அரசாங்கத்திடம் பலவீனங்கள் இருந்தால் அதை விமர்சிப்பதும்தான் முதலில் செய்ய வேண்டிய விடயம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This