இந்தியாவை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு – வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

இந்தியாவை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு – வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

டெல்லியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயற்பட்ட டொக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் நண்பர் எனக் கூறப்படுகிறது.

மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது.

இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டள்ளனர்.

டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

Share This