தெஹிவளையில் ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு

கொழும்பு – தெஹிவளை ரயில் பாதையில் நடந்து சென்ற தம்பதியினர் கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 4) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 58 மற்றும் 59 வயதுடையவர்கள், பதுளையின் பதுலுபிட்டிய பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.