கடலோர ரயில் சேவை பாதிப்பு

கடலோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு அருகில் கடலோர ரயில் தண்டவாளம் உடைந்ததால் ரயில் சேவை தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.