கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா

கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக அவர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களின் தொகுப்பை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக அளித்தேன்.

நூலக பணியாளர்களுடன் ஒரு சிறிய தருணத்தை செலவிட்டேன்.  இந்த நேரத்தில், பேராசிரியர் ஜெயதேவா உயங்கோடா மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் வழங்கிய ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share This