Category: இலங்கை

Rebuilding Sri Lanka திட்டத்திற்கு, 1893 மில்லியன் ரூபா நிதியுதவி

Diluksha- December 10, 2025

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக செயற்படுத்தப்பட்டுள்ள Rebuilding Sri lanka திட்டத்திற்கு, 1893 மில்லியன் ரூபா நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ... Read More

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

Diluksha- December 10, 2025

டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவிலிருந்து 10,453 சுற்றுலாப் ... Read More

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்றும் கூடுகிறது

Diluksha- December 10, 2025

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்று (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்படும் வெளிநாட்டு உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி ... Read More

கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான ரயில் சேவை வழமைக்கு

Diluksha- December 10, 2025

இயற்கை அனர்த்த நிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரையான ரயில் சேவை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ரம்புக்கனையிலிருந்து இன்று அதிகாலை 3.25 க்கு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலுடன் ரயில் ... Read More

பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு

Mano Shangar- December 10, 2025

பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு ... Read More

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

Diluksha- December 10, 2025

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் ... Read More

வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து

Diluksha- December 9, 2025

காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள ... Read More

ட்ரம்பிற்கு ஜனாதிபதி நன்றி

Diluksha- December 9, 2025

தேவையான நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது ... Read More

மன்னார் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

Diluksha- December 9, 2025

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி ... Read More

அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

Diluksha- December 9, 2025

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள ... Read More

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படும் திகதி அறிவிப்பு

Diluksha- December 9, 2025

இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ... Read More

மற்றுமொரு நிவாரணத் தொகுதியுடன் வந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம்

Mano Shangar- December 9, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இன்று தனது எட்டாவது மனிதாபிமான உதவி விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ... Read More