Category: இலங்கை
கண்டியில் யாசகப் பெண்ணைக் கொன்ற இளைஞன் மற்றொரு கொலையிலும் சிக்கினார்
கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் ... Read More
கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது – வெள்ளவத்தையிலும் சோதனை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரத் வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகளில ஒருவர் ... Read More
80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல மஹா வாங்குவா ... Read More
Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க அழைப்பு
'டித்வா' சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விசேட அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ... Read More
யாழ். எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலைகள் கொள்ளை
யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் ... Read More
ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ... Read More
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன ... Read More
கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு ... Read More
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ... Read More
அரச வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடளாவீய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் ... Read More
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் பலி
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த பெண் மேலும் சில வெளிநாட்டவர்களுடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ... Read More
விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை ஓமானின் ... Read More












