Category: இலங்கை

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது

Nishanthan Subramaniyam- November 13, 2025

“தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் ... Read More

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்

Nishanthan Subramaniyam- November 13, 2025

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை ... Read More

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை

Nishanthan Subramaniyam- November 13, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கின்றது. இரண்டாம் வாசிப்பு ... Read More

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தொல். திருமாவளவன்

Mano Shangar- November 13, 2025

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்

Nishanthan Subramaniyam- November 13, 2025

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் ... Read More

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Mano Shangar- November 13, 2025

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் ... Read More

தோட்டத் தொழிலாளருக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு – ரோஹினி கவிரத்ன எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- November 13, 2025

தனியார் தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ரூபா 200 வீதம் வழங்குவதற்காக பாதீட்டில் ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்ட விடயத்தில் தலையிடுமாறு கையூட்டல் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ... Read More

துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை

Nishanthan Subramaniyam- November 13, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் ... Read More

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- November 13, 2025

கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாததால் காரணமாக சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் ... Read More

இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை

Mano Shangar- November 13, 2025

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலங்கையின் கட்டுமானத் துறையின் பங்களிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் ஒன்பது வீதமாக இருந்த பங்களிப்பு தற்போது 3.5 வீதம் முதல் 6 ... Read More

ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்

Nishanthan Subramaniyam- November 13, 2025

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு தாமரைக் குளம் அரங்கில் நடைபெற்ற ... Read More

பாதீட்டுக்கு ஆதரவா? எதிர்ப்பா? தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று

Nishanthan Subramaniyam- November 13, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ... Read More