Category: முக்கிய செய்திகள்
நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More
பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் ... Read More
யோஷித, டெய்சி பாட்டி ஆகியோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ... Read More
நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிக்கப்பட்டது – நாளை மகோற்சவம் ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் ... Read More
ஜனாதிபதி அநுரவிற்கு மாலைத்தீவில் அரச மரியாதையுடன் வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி ... Read More
தேவைப்பட்டால் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் – அமைச்சர் லால் காந்தா
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ... Read More
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது
உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ... Read More
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலை ... Read More
அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்த வாரம் மற்றுமொரு கலந்துரையாடல்
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக ... Read More
ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைத்தீவில் தங்கியிருப்பார் என ... Read More
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
நாட்டின் 49 ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி அலுவலகத்தில்; அவர் இன்று ... Read More
நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை – CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக ... Read More












