நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல் நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

,தற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள கீழ்வரும் முகவரிகளில் அமைந்துள்ள கட்டிடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இலக்கம் B 88, கிறகெரி வீதி, கொழும்பு 07
இலக்கம் C 76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07
இலக்கம் B 108, விஜேராம வீதி, கொழும்பு 07
இலக்கம் B 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 07

உயர் நீதிமன்றத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய வீடு என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share This