
நாவின்னவில் பேருந்து விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவின்ன பேருந்து நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து ஒன்று, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பேருந்து ஒன்றின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மஹரகம பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது களுபோவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
