அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் கொழும்புக்கு அழைப்பு

அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் கொழும்புக்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று திங்கட்கிழமை (23) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதியமைச்சரின் தலைமையில் நீதியமைச்சில் இன்று(23) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் மற்றும் ஆணையாளர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக
சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This