ஏழு கோடி மதிப்பு போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், போதைப்பொருளை தாய்லாந்திலிருந்து வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்கு கொண்டுச் சென்று, அங்கிருந்து இன்று (19) அதிகாலை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-179 மூலம் இலங்கைக்கு வந்துள்ளார்.
இதன்படி, அவர் கொண்டு வந்த பொருட்களில் பல இனிப்புப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோகிராம் 910 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பயணியையும் அவர் கொண்டு வந்த போதைப்பொருள் தொகுப்பையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.