கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஐவர் கைது

தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (14) கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 670 கிலோகிராம் ஐஸ், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ கிராம் ஹாஷிஷ் ஆகியவை அடங்கியுள்ளன.