டில்லியில் நிலநடுக்கம்

டில்லியில் நிலநடுக்கம்

இந்திய தலைநகர் புது டில்லியில் இன்று (10) காலை 09.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹரியானாவின் ரோஹ்தக் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும், நிலநடுக்கம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை, மேலும் டில்லி உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டில்லியில் பெய்த கனமழை காரணமாக, விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டில்லியின் அதிக மழை பெய்யும் பகுதியில் 60 மிமீ மழையும், வறண்ட பகுதியில் 1.4 மிமீ மழையும் பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

பருவமழை வடக்கு நோக்கி நகர்வதால் டில்லியின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை (11)க்குள் மழை நிலைமைகள் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

 

Share This