தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் இல்லையென பிரதமர் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவர் இதனை அறிவித்தார்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மாத்திரமே நாங்கள் தேர்வில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம்
என பிரதமர் கூறினார்.
பாடத்திட்டங்களில் நடைமுறை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.