புதுக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பலரால் தான் அச்சுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
“இந்த அமர்வுகளுக்குப் பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இந்த பிரச்சினை நமது நாட்டில் மிகவும் முக்கியமானதாகிவிட்டதால், குறைந்தபட்சம் பொது அமர்வுகளின் போது எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், குறித்த விவகாரம் சபாநாயகரிடம் பரிந்துரைக்கப்படும் என்று துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.