சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்துக்கான 42 ரயில் சேவைகள் இரத்து

சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்துக்கான 42 ரயில் சேவைகள் இரத்து

ரயில் தடம் புரள்வு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 04 ரயில் சேவைகள் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 ரயில் சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன.

மலையக ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 42 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Share This