பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.07) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பிரசன்ன ரணவீர சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை ஆராய்வதற்கு மறுப்பு தெரிவித்து நீதவான் விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார்.

கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு உரித்தான காணியொன்றை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

பிரசன்ன ரணவீரவினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை எதிர்வரும் 14ஆம் திகதி பரிசீலிப்பதற்கு நீதவான் திகதியிட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )