
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (13) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கைதான மீனவர்கள் படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES இலங்கை
