
இஸ்ரேலிய துருப்புகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேலிய தளங்கள் மற்றும் துருப்புகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள தளங்களையும், தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகளையும் குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனானிய ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் அல்-ஆதைசா நகரின் கானூக் பகுதியில், காலை 8:20 மற்றும் 8:15க்கு இஸ்ரேலியப் வீரர்கள் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு லெபனானில் ஆறு வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மூன்று வெவ்வேறு சம்பவங்களில் வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பீரங்கி எதிர்ப்புத் தாக்குதலிலும், மூவர் ஆளில்லா விமானத் தாக்குதலிலும், மற்றொருவர் செயல்பாட்டு விபத்திலும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
