
வடமராட்சி பகுதியில் இளம் தாய் தீடிரென உயிரிழப்பு
வடமராட்சி ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண்ணொருவர் நேற்றையதினம் காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
CATEGORIES இலங்கை
